பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அகத்தியன் | புஷ்பவனம் குப்புசாமி & சௌம்யா ராவ் | இளையராஜா | காதல் கவிதை |
Aalana Naal Mudhala Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆச பட்டேன்…
பெண் : வேணான்னு சொல்லுறீகளே…
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே…
ஆடியில கட்டிகிட்டா…
சித்திரைக்கு புள்ள வரும்…
பெண் : ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…
ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…
ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…
ஆண் : வேணான்டி விட்டு விடடி…
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமுன்னு…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…
ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…
அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
பெண் : ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆசபட்டேன்…
—BGM—
பெண் : புல்லறுக்கப் போகையிலே…
புல்லநுனி தண்ணியில…
ஒம் முகத்த பாத்துபுட்டே…
வூடு வந்து சேந்து புட்டேன்…
ஏம் பாசம் தெரியாது மாமா…
ஆண் : ஆஹா…
பெண் : இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…
ஆண் : ஆஹா…
பெண் : எம் பாசம் தெரியாது மாமா…
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…
ஆண் : கொல்லையிலே மாங்கா மரம்…
கொத்து கொத்து காச்சிருக்கு…
காவக்காரன் தூங்கையிலே…
கைய எட்டி மாம்பழத்த…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…
ஆண் : அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…
அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…
பெண் : பூவெடுத்து மால கட்டி ராசா…
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா…
உன்ன நெனச்சே பொறந்தேன்… வளந்தேன்…
ராசா… என் ராசா…
ஆண் : யம்மா… உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…
—BGM—
ஆண் : காளக் கண்ணு வாங்கிக் கட்டி…
பால் கறக்க ஆசபட்டேன்…
கோழிக் குஞ்சு குட்டி போட…
கோயிலுக்கு நேந்துகிட்டேன்…
ஆண் : முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…
பெண் : ஆஹா… ஒத்தைக்கொத்த சண்டையின்னா…
ஓடிப் போற ஆம்பள நீ…
செத்துப் போன பாம்ப பாத்தே…
சத்தம் போட்ட வீரனும் நீ…
ஆண் : ஏய்…
பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
ஆண் : ஆ…
பெண் : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…
ஆண் : க்கும்ம் ஏ…
பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…
ஆண் : ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்…
நான் ஆம்பளதான் வீரத்த நீ பாரேன்…
நான் நெனச்சா மலைய வளைப்பேன்…
வாரேன்… நான் வாரேன்…
பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
பெண் : வேணான்னு சொல்லுறீகளே…
ஆண் : அடி வேணான்டி விட்டு விடடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமடி…
பெண் : ஆகாது ஆகாது மச்சானே…
ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
பெண் : ஆகாது ஆகாது மச்சானே…
ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
Notes : Aalana Naal Mudhala Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஆளான நாள் முதலா பாடல் வரிகள்.