பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | கரகாட்டக்காரன் |
Maanguyile Poonguyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
பெண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
பெண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
—BGM—
ஆண் : காலைத் தழுவி நிக்கும்…
கனகமணிக் கொலுசு… யம்மா…
நானாக மாற இப்போ…
நெனைக்குதம்மா மனசு…
பெண் : உள்ளே இருக்குறீக…
வெளிய என்ன பேச்சு… ஐயா…
ஒன்னும் புரியவில்ல…
மனசு எங்கே போச்சு…
ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்…
வந்து விழுந்த நல்ல வெததான்…
சந்திரனத்தான் சாட்சியும் வச்சு…
சொன்ன கத தான் நல்ல கததான்…
பெண் : தோல தொட்டு ஆள… ஐயா…
சொர்க்கத்துல சேர…
மால வந்து ஏற… பொண்ணு…
சம்மதத்தக் கூற…
ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு…
முத்தையன் கணக்கு…
மொத்தமும் உனக்கு…
பெண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
—BGM—
பெண் : மாமரத்து கீழே நின்னு…
மங்கையவ பாட…
அந்த மங்கை குரலில்…
மனம் மயங்கியது யாரு…
ஆண் : பூமரத்துக் கீழிருந்து…
பொண்ணூ அவ குளிக்க…
அந்த பூமரத்து மேலிருந்து…
புலம்பியது யாரு…
பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு…
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்…
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்…
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்…
ஆண் : கூரைப் பட்டுச் சேலை… யம்மா…
கூட ஒரு மால…
வாங்கி வரும் வேள… பொண்ணு…
வாசமுள்ள சோல…
பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு…
தேடுது மனசு பாடுது வயசு…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
பெண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
Notes : Maanguyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.