பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கரகாட்டக்காரன் |
Kudagu Malai Song Lyrics in Tamil
ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
ஆண் : ஏதோ நினைவுதான்…
உன்ன சுத்தி பறக்குது…
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது…
ஒத்த வழி என் வழிதானே… மானே…
ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
—BGM—
ஆண் : மானே மயிலே… மரகத குயிலே…
தேனே நான் பாடும் தேமாங்கே…
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே…
காதில் கேட்டாயோ என் வாக்கே…
ஆண் : உன்ன எண்ணி நான்தான்…
ஒரு ஊர்கோலம் போனேன்…
தன்னந்தனியாக நிக்கும்…
தேர் போல ஆனேன்…
ஆண் : பூ பூத்த சோலையிலே…
பொன்னான மாலையிலே…
நீ வந்த வேளையிலே… மயிலே…
ஆண் : நீர் பூத்த கண்ணு ரெண்டு…
நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு…
பெண் : குடகு மலை காற்றில் ஒரு…
பாட்டு பாடுது இந்த பைங்கிளி…
குடகு மலை காற்றில் ஒரு…
பாட்டு பாடுது இந்த பைங்கிளி…
—BGM—
பெண் : மறந்தால்தானே நினைக்கனும் மாமா…
நினைவே நீதானே நீதானே…
மனசும் மனசும் இணைஞ்சது மாமா…
நெனச்சு தவிச்சேனே நான்தானே…
பெண் : சொல்லி விட்ட பாட்டு…
தேக்கு காத்தோட கேட்டேன்…
தூது விட்ட ராசா…
மனம் தடுமாற மாட்டேன்…
பெண் : ஊரென்ன சொன்னா என்ன…
ஒன்னாக நின்னா என்ன…
உன் பேரை பாடி நிப்பேன் மாமா…
பெண் : தூங்காம உன்ன எண்ணி…
துடிச்சாளே இந்த கன்னி…
வா மாமா…
ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
பெண் : ஏதோ நினைவுதான்…
உன்ன சுத்தி பறக்குது…
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது…
ஆண் : ஒத்த வழி என் வழிதானே… மானே…
பெண் : குடகு மலை காற்றில்…
ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி…
ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
Notes : Kudagu Malai Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. குடகு மலை பாடல் வரிகள்.