பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | சின்ன தம்பி |
Kuyila Pudichchu Song Lyrics in Tamil
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
—BGM—
ஆண் : மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
—BGM—
ஆண் : ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு…
என்னன்னு தெரியாது எனக்கு…
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு…
ஆனாலும் பயனென்ன அதுக்கு…
ஆண் : வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்…
யார் மேலே எனக்கென்ன கோபம்…
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு…
வந்தது தண்டனையா…
இது தெய்வத்தின் நிந்தனையா…
இதை யாரோடு சொல்ல…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
—BGM—
ஆண் : எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு…
என்னான்னு யார் சொல்லக் கூடும்…
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட…
எந்நாளும் அழியாமல் வாழும்…
ஆண் : யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை…
போனாலும் வந்தாலும் அதுதான்…
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி…
கோழை என்றே இருந்தேன்…
போனது கை நழுவி…
இதை யாரோடு சொல்ல…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா… ஓஓ ஓஓ ஓஹோ…
ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
Notes : Kuyila Pudichchu Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Vaali. குயில புடிச்சி பாடல் வரிகள்.