பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே .ஜே. யேசுதாஸ் | இளையராஜா | எதிர்காற்று |
Koondai Vittu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
—BGM—
ஆண் : நான் வளர்க்கும் பூச்செடியில்…
முட்கள் மட்டும் பூப்பதென்ன…
பாவமா சாபமா காலத்தின் கோலமா…
ஆண் : கால் நடக்கும் பாதை எல்லாம்…
கற்கள் குத்தி வலிப்பதென்ன…
யார் இதன் காரணம் தெய்வம்தான் கூறணும்…
ஆண் : வைரக் கல்லை நான் கொடுத்தால்…
வாங்கிக் கொள்ளும் உலகமே…
உப்புக் கல்லை எனக்களித்து…
ஒப்புக் கொள்ளச் சொல்லுமே…
ஆண் : நெய்யை விட்டு தீபம் ஏற்றினால்…
கையைச் சுட்டு நன்றி காட்டுதே… ஓ…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
—BGM—
ஆண் : தெய்வத்துக்கு ஆறு முகம்…
மானிடர்க்கு நூறு முகம்…
மெய் எது பொய் எது யார் அதைக் கண்டது…
ஆண் : பாலும் இங்கு வெள்ளை நிறம்…
கள்ளும் இங்கு வெள்ளை நிறம்…
பால் எது கள் எது பேதம் யார் கண்டது…
ஆண் : நேசம் வைத்த யாருக்குமே…
நெஞ்சம் எல்லாம் காயம்தான்…
பாசம் வைத்த கண்களிலே…
பார்ப்பதெல்லாம் மாயம்தான்…
ஆண் : ஏறிச் சென்ற கால்கள் உதைக்குது…
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது… ஓ…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
Notes : Koondai Vittu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. கூண்டைவிட்டு பாடல் வரிகள்.