கூண்டைவிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே .ஜே. யேசுதாஸ்இளையராஜாஎதிர்காற்று

Koondai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…

BGM

ஆண் : நான் வளர்க்கும் பூச்செடியில்…
முட்கள் மட்டும் பூப்பதென்ன…
பாவமா சாபமா காலத்தின் கோலமா…

ஆண் : கால் நடக்கும் பாதை எல்லாம்…
கற்கள் குத்தி வலிப்பதென்ன…
யார் இதன் காரணம் தெய்வம்தான் கூறணும்…

ஆண் : வைரக் கல்லை நான் கொடுத்தால்…
வாங்கிக் கொள்ளும் உலகமே…
உப்புக் கல்லை எனக்களித்து…
ஒப்புக் கொள்ளச் சொல்லுமே…

ஆண் : நெய்யை விட்டு தீபம் ஏற்றினால்…
கையைச் சுட்டு நன்றி காட்டுதே… ஓ…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

BGM

ஆண் : தெய்வத்துக்கு ஆறு முகம்…
மானிடர்க்கு நூறு முகம்…
மெய் எது பொய் எது யார் அதைக் கண்டது…

ஆண் : பாலும் இங்கு வெள்ளை நிறம்…
கள்ளும் இங்கு வெள்ளை நிறம்…
பால் எது கள் எது பேதம் யார் கண்டது…

ஆண் : நேசம் வைத்த யாருக்குமே…
நெஞ்சம் எல்லாம் காயம்தான்…
பாசம் வைத்த கண்களிலே…
பார்ப்பதெல்லாம் மாயம்தான்…

ஆண் : ஏறிச் சென்ற கால்கள் உதைக்குது…
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது… ஓ…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…


Notes : Koondai Vittu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. கூண்டைவிட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top