பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா | தேவா | கட்டபொம்மன் |
Koondai Vittu Oru Paravai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல்மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…
பெண் : பூந்தோரணம் அது ஏன் வாடணும்…
போராட்டமா நம் சீர் சீதனம்…
தண்ணியில மானப் போல நானிருக்கேன்…
ஓஓ… தரையில மீனப் போல நீயிருக்க…
பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…
—BGM—
பெண் : வெத்தலையில் பாக்கு வச்சு…
பத்துப் பேர பாக்க வச்சு…
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே…
பெண் : பெத்தவங்க துணையுமில்ல…
அந்த மாமனவன் உறவுமில்ல…
துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே…
பெண் : தீராத கோபம் அது யார் போட்ட தூபம்…
இதில் நான் செய்த பாவம் என்ன…
என்னதான் பாடுறேன்…
சொந்தம் ஒன்னு தேடுறேன்…
பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…
—BGM—
ஆண் : நம்பி வந்த காதல் ஒன்னு…
அன்பு உள்ள பாசம் ஒன்னு…
ரெண்டுப் பக்கம் தவிக்கிறேன்டி மானே…
ஆண் : அண்ணனுக்கு பயந்த தம்பி…
அண்ணியாரு மனச நம்பி…
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே…
ஆண் : தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம்…
ஒரு தவறாகிப் போகாதடி…
மெல்ல மெல்ல மாறும் நல்ல வழிக் கூறும்…
ஆண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு…
இனி வேறு என்ன பேச்சு…
ஆண் : பூந்தோரணம் அது வாடாதம்மா…
போராடியே அதைக் காப்பேனம்மா…
தண்ணியில மானப் போல நானிருக்கேன்…
ஓஓ… தரையிலே மீனப் போல நீயிருக்க…
பெண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே தாரம் என்று ஆச்சு…
இனி வேறு என்ன பேச்சு…
Notes : Koondai Vittu Oru Paravai Song Lyrics in Tamil. This Song from Kattabomman (1993). Song Lyrics penned by Kalidasan. கூண்டைவிட்டு ஒரு பறவை பாடல் வரிகள்.