கூண்டைவிட்டு ஒரு பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாதேவாகட்டபொம்மன்

Koondai Vittu Oru Paravai Song Lyrics in Tamil


BGM

பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல்மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…

பெண் : பூந்தோரணம் அது ஏன் வாடணும்…
போராட்டமா நம் சீர் சீதனம்…
தண்ணியில மானப் போல நானிருக்கேன்…
ஓஓ… தரையில மீனப் போல நீயிருக்க…

பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…

BGM

பெண் : வெத்தலையில் பாக்கு வச்சு…
பத்துப் பேர பாக்க வச்சு…
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே…

பெண் : பெத்தவங்க துணையுமில்ல…
அந்த மாமனவன் உறவுமில்ல…
துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே…

பெண் : தீராத கோபம் அது யார் போட்ட தூபம்…
இதில் நான் செய்த பாவம் என்ன…
என்னதான் பாடுறேன்…
சொந்தம் ஒன்னு தேடுறேன்…

பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…

BGM

ஆண் : நம்பி வந்த காதல் ஒன்னு…
அன்பு உள்ள பாசம் ஒன்னு…
ரெண்டுப் பக்கம் தவிக்கிறேன்டி மானே…

ஆண் : அண்ணனுக்கு பயந்த தம்பி…
அண்ணியாரு மனச நம்பி…
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே…

ஆண் : தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம்…
ஒரு தவறாகிப் போகாதடி…
மெல்ல மெல்ல மாறும் நல்ல வழிக் கூறும்…

ஆண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…
தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு…
இனி வேறு என்ன பேச்சு…

ஆண் : பூந்தோரணம் அது வாடாதம்மா…
போராடியே அதைக் காப்பேனம்மா…
தண்ணியில மானப் போல நானிருக்கேன்…
ஓஓ… தரையிலே மீனப் போல நீயிருக்க…

பெண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல் மானல் ஆச்சு…

ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே தாரம் என்று ஆச்சு…
இனி வேறு என்ன பேச்சு…


Notes : Koondai Vittu Oru Paravai Song Lyrics in Tamil. This Song from Kattabomman (1993). Song Lyrics penned by Kalidasan. கூண்டைவிட்டு ஒரு பறவை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top