பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | செந்தமிழ் செல்வன் |
Koodu Enge Thedi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
கேள்வியே பதில் என்ன…
பதில்களே வழி என்ன…
நீங்கள் சொல்லுங்களேன்…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
—BGM—
ஆண் : கோபமாய் பேசினேன்…
வார்த்தையை வீசினேன்…
உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று…
பெண் : காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன்…
உந்தன் சொல் கூட அது போல ஒன்று…
ஆண் : பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே…
உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா…
பெண் : என் சோகமே என்றும் என்னோடுதான்
எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தானய்யா…
ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
பெண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
—BGM—
பெண் : ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே…
அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல…
ஆண் : அந்தத் தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே…
இங்கு யாரும் அனாதைகள் அல்ல…
பெண் : ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம்…
சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்…
ஆண் : கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல்…
வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம்…
பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
கேள்வியே பதில் என்ன…
பதில்களே வழி என்ன…
நீங்கள் சொல்லுங்களேன்…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
ஆண் : ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
ஆண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
Notes : Koodu Enge Thedi Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. கூடு எங்கே தேடி பாடல் வரிகள்.