பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | செந்தமிழ் செல்வன் |
Paatu Esa Paatu Song Lyrics in Tamil
ஆண் : கூவாமல் சோலைக் குயில்…
கூண்டுக்குள் வாழ்கின்றதே…
சோகத்தில் ஆள்கிறதே…
ஆவாரம் பூவே நீ வா…
—BGM—
ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…
ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…
ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
—BGM—
ஆண் : பட்டுப் பூச்சி போலே…
வட்டம் போடும் நாளில்…
கட்டுக் காவல் ஏம்மா…
கன்னிப் பாவை வாழ்வில்…
ஆண் : தன்னைத் தானே யாரும்…
கட்டிப் போட்டதில்லை…
தென்றல் காற்றுக்கேது…
துள்ளிப் பாய எல்லை…
ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…
ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…
ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…
ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
—BGM—
ஆண் : தெற்கே நோக்கிப் போகும் தண்ணீர் கொண்ட மேகம்…
மண்ணின் மீது தூறல் மெல்ல போடும் நேரம்…
செக்கர் வானம் பூமி சொர்க்கம் போலக் காணும்…
சாரல் வந்து வீசும் சாயங்கால நேரம்…
ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…
ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…
ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…
ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…
ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…
Notes : Paatu Esa Paatu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. பாட்டு எசப் பாட்டு பாடல் வரிகள்.