பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | செந்தமிழ் செல்வன் |
Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
—BGM—
ஆண் : உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
—BGM—
ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…
—BGM—
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…
ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…
—BGM—
ஆண் : பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால்…
திறவாத கதவேதும் கிடையாதம்மா…
தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை…
தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா…
ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும்…
நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம்…
விழி ஈரமும் மன பாரமும்…
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்…
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
—BGM—
ஆண் : தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன்…
தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன்…
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்…
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்…
ஆண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள்…
அந்தத் தாய்தானே நான் போற்றும் கடவுள் வடிவம்…
பல கோயிலோ பல தெய்வமோ…
இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும்…
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…
ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…
ஆண் : குயிலே இள மாங்குயிலே…
Notes : Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. குயிலே இள மாங்குயிலே பாடல் வரிகள்.