பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | ஜென்சி அந்தோணி, எஸ். பி. சைலஜா & மலேசியா வாசுதேவன் | இளையராஜா | நிறம் மாறாத பூக்கள் |
Aayiram Malargale Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
—BGM—
பெண் : வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ…
பெண் : ராகங்கள் நூறு பாவங்கள் நூறு…
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ…
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
—BGM—
பெண் : கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம்…
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ…
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்…
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ…
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
—BGM—
ஆண் : பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே…
மலையின் மீது ரதி உலாவும் நேரமே…
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்…
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ…
பெண் : ஆயிரம்…
ஆண் : மலர்களே…
ஆண் & பெண் : மலருங்கள்…
ஆண் & பெண் : அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
ஆண் & பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
Notes : Aayiram Malargale Song Lyrics in Tamil. This Song from Niram Maratha Pookkal (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆயிரம் மலர்களே பாடல் வரிகள்.