| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | ஹரிஹரன் & ஹரிணி | கார்த்திக் ராஜா | உல்லாசம் |
Konjum Manjal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
ஆண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…
ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
—BGM—
பெண் : தீ மூட்டியதே குளிர்க் காற்று…
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று…
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்…
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு…
ஆண் : வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்…
படகுகளா இது பூவுடல் ஆடிட…
இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது…
ஆனந்த தவம் இது…
பெண் : உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே…
அடடா என்ன சுகமே…
ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…
—BGM—
ஆண் : உன் மேனியில் ஆயிரம் பூக்கள்…
நான் வாசனை பார்த்திட வந்தேன்…
புல் நுனியினில் பனித் துளி போலே…
உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன்…
பெண் : மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ…
வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது…
இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது…
ஆண் : உன் வளையோசையில் நடந்தது இரவே…
நினைத்தால் என்ன சுகமே…
—BGM—
பெண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அன்பே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…
ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
Notes : Konjum Manjal Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சும் மஞ்சள் பாடல் வரிகள்.

