கண்ணுக்குள்ளே உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉன்னி மேனன்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆஹா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்…

ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…

BGM

ஆண் : நெடுங்காலமாய் புழங்காமலே…
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே…
உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே…
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…

ஆண் : தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக…
நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

BGM

ஆண் : மழை மேகமாய் உருமாறவா…
உன் வாசல் வந்து உயிா் தூவவா…
மனம் வீசிடும் மலராகவா…
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா…

ஆண் : கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக…
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே…
அட உன்னுள் உறைந்தேனே…
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே…
உனை என்றும் மறவேனே…

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்…
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்…

ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…


Notes : Kannukkulle Unnai Vaithen Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே உன்னை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top