| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம் | சந்திரபோஸ் | ஊமைகுயில் |
Kannam Sivanthathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஒய் தந்தானா…
பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
பெண் : பாழும் மனசு அடிக்கடி துடிக்கும்…
நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும்…
தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஆ தந்தானா…
—BGM—
ஆண் : ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு…
பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு…
பாவை நீயும் பக்கத்தில் இருக்க…
ஆசை தீரும் என்னை நீ அணைக்க…
பெண் : நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு…
தாலியேறும் உன்னாலே எனக்கு…
ஆசை தீரும் என்னாலே உனக்கு…
ஆசை அதை நீ இப்போ அடக்கு…
தந்தானா ஒய் தந்தானா…
ஆண் : தந்தானா ஒய் ஒய் தந்தானா…
—BGM—
ஆண் : பொண்ணா பொறந்தா தயக்கம்…
அது தானா தீரும் உனக்கும்…
ஆசை இருக்கு உனக்கும்…
உன்னப் பார்த்தா புரியுது எனக்கும்…
பெண் : இளம் வயது ஆசை எனக்கு…
ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு…
காலம் வரும்வரை காத்திருப்பேன்…
தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன்…
ஆஹ் தந்தானா ஒய் தந்தானா…
ஆண் : ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா…
ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
பெண் : ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
ஆண் : தந்தானா ஒய் தந்தானா…
பெண் : ஹான் தந்தானா ஆ தந்தானா…
ஆண் & பெண் : தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஆ தந்தானா…
Notes : Kannam Sivanthathu Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. கன்னம் செவந்தது பாடல் வரிகள்.
