கண்டுபிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாஉன்னுடன்

Kandupidi Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

பெண் : கண்கள் மயங்க வைத்து…
இளம் கன்னம் வருடியவன்…
விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…

BGM

ஆண் : கண்டுபிடி அவளைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…

ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…
தடையம் ஏதும் இன்றி…
என் இதயம் திருடியவள்…

பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

BGM

பெண் : முகம் கொஞ்சம் நினைவிருக்கு…
அவன் முகவரி தெரியவில்லை…
முதல் முதல் திருடியதால்…
என்னை முழுசாய் திருடவில்லை…

BGM

ஆண் : யோசனை செய்வதர்க்கும்…
அந்த பூ முகம் நினைவில்லை…
வாசலில் மறைந்து விட்டாள்…
அவள் வாசனை மறையவில்லை…

பெண் : திருடி சென்றதை திருப்பி தந்தால்…
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்…

ஆண் : திருடி சென்றவள் திரும்பி வந்தால்…
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்…

பெண் : உறவே உறவே வருக…
ஆண் : உயிரால் உயிரை தொடுக…

BGM

ஆண் : நீ என்னை தழுவிகொண்டால்…
என் நெற்றிக்குள் இனிக்குமடி…
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே…
தங்கம் தண்ணீரில் விளையுமடி…

BGM

பெண் : மாறாப்பை சரியவிட்டு…
உந்தன் மார்போடு படரும் கோடி…
பேரின்ப கவி எழுத…
கம்பன் பிறக்கட்டும் பழைய படி…

ஆண் : நேரம் தூரம் மறந்து விட்டு…
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்…

பெண் : நீல இரவை நீள செய்து…
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்…

ஆண் : உறவே உறவே வருக…
உயிரால் உயிரை தொடுக…

ஆண் : கண்டுபிடி அவளை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…

பெண் : கண்டுபிடி அவனை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…

ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…

பெண் : விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…

BGM


Notes : Kandupidi Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கண்டுபிடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading