கண்டு கொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருவருள்

Kandukonden Song Lyrics in Tamil


ஆண் : கண்டு கொண்டேன்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…

BGM

ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…

ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம்…
விழித்த முகத்தில் கந்தர் முகம்…
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு…
கிடைத்த முருகனின் அன்பு வரம்…

ஆண் : கண்டு கொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள்…
எவையும் இல்லை ஐயா…
ஒரு சூடமேனும் தருவார்கள் கூட…
இங்கில்லை ஐயா…
தனியாக நிற்கும் முருகா உனக்கு…
இனி நானுண்டு ஐயா… இனி நானுண்டு ஐயா…

BGM

ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
வலிமையுண்டு பொறுமையுண்டு…
உழைப்பதென்று நினைப்பதுண்டு…

ஆண் : உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு…
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…

BGM

ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…

ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…
நான் சொன்னது உண்மையடா…

BGM

ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…

BGM

ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…

ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…

BGM

ஆண் : சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…

BGM

ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…
சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…

ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே…
பிணி பல தீர்க்கும் அருமருந்தே…
மனதில் இருக்கும் குரு முருகா…
மருதமரத்து வேல் முருகா…
வேல் முருகா… வேல் முருகா…


Notes : Kandukonden Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. கண்டு கொண்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading