| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | திருவருள் |
Kandukonden Song Lyrics in Tamil
ஆண் : கண்டு கொண்டேன்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
—BGM—
ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
ஆண் : கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்…
ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம்…
விழித்த முகத்தில் கந்தர் முகம்…
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு…
கிடைத்த முருகனின் அன்பு வரம்…
ஆண் : கண்டு கொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
—BGM—
ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள்…
எவையும் இல்லை ஐயா…
ஒரு சூடமேனும் தருவார்கள் கூட…
இங்கில்லை ஐயா…
தனியாக நிற்கும் முருகா உனக்கு…
இனி நானுண்டு ஐயா… இனி நானுண்டு ஐயா…
—BGM—
ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
வலிமையுண்டு பொறுமையுண்டு…
உழைப்பதென்று நினைப்பதுண்டு…
ஆண் : உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு…
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு…
—BGM—
ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…
ஆண் : உருகுதே கண்கள் உருகுதே…
பெருகுதே வெள்ளம் பெருகுதே…
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது…
உனது கோயில் மலரும்… முருகா…
நான் சொன்னது உண்மையடா…
—BGM—
ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…
—BGM—
ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது…
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே…
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்…
ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…
—BGM—
ஆண் : சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…
—BGM—
ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்…
தந்தாய் கோடி திருமுருகா…
சிந்தாமணியே செவ்வேல் உன்னை…
கண்டதும் போதும் வடிவழகா…
ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே…
பிணி பல தீர்க்கும் அருமருந்தே…
மனதில் இருக்கும் குரு முருகா…
மருதமரத்து வேல் முருகா…
வேல் முருகா… வேல் முருகா…
Notes : Kandukonden Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. கண்டு கொண்டேன் பாடல் வரிகள்.
