| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | திருவருள் |
Kandhan Kaaladiyai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
—BGM—
ஆண் : தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்…
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்…
சிவசக்திதானே வேலன்…
ஆண் : தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்…
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்…
சிவசக்திதானே வேலன்…
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்…
—BGM—
ஆண் : அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்…
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன்தான் திருமகன்…
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன்தான் திருமகன்…
ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
—BGM—
ஆண் : உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி…
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி…
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி…
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி…
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி…
—BGM—
ஆண் : கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி…
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு…
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு…
ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
—BGM—
ஆண் : ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே…
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே…
ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே…
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே…
ஆண் : அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்…
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்…
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்…
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்…
ஆண் : கந்தனிடம் செல்லுங்கள்…
என்ன வேண்டும் சொல்லுங்கள்…
கந்தனிடம் செல்லுங்கள்…
என்ன வேண்டும் சொல்லுங்கள்…
ஆண் : வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்…
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்…
ஆண் : கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் கந்தன் கந்தன் காலடியை வணங்குங்கள்…
Notes : Kandhan Kaaladiyai Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. கந்தன் காலடியை பாடல் வரிகள்.
