கடவுள் பாதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன்ஷங்கர் எஹ்சான் லாய்ஆளவந்தான்

Kadavul Paadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…

ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று…
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்…
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று…
மிருகம் மட்டும் வளர்கிறதே…

ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா…
நாளை மிருகம் கொல்வாயா…
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு…
மீண்டும் கடவுள் செய்வாயா…

ஆண் : குரங்கில் இருந்து மனிதன் என்றால்…
மனிதன் நிறையா கணிப்பானா…
மிருக ஜாதியில் பிறந்த மனிதா…
தெய்வ ஜோதியில் கலப்பாயா… ஹா…

BGM

ஆண் : நந்தகுமாரா… கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…

ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று…
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்…
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று…
மிருகம் மட்டும் வளர்கிறதே…

BGM

ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
காற்றில் ஏறி மலையில் ஆடி…
கவிதை பாடும் பறவை நான்…

BGM

ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
காற்றில் ஏறி மலையில் ஆடி…
கவிதை பாடும் பறவை நான்…

ஆண் : ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்…
உயிரில் வேர்கள் குளிர்கிறதே…
எல்லாம் துளியில் குளிரும் போதும்…
இரு துளி மட்டும் சுடுகிறதே…

ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா…
மழை நீர் சுடாது தெரியாதா…
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்…
வெந்நீர் துளி என அறிவாயா…

ஆண் : சுட்ட மழையும் சுடாத மழையும்…
ஒன்றாய் கண்டவன் நீதானே…
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையில்…
குளிக்க வைத்தவன் நீதானே…யே…


Notes : Kadavul Paadhi Song Lyrics in Tamil. This Song from Aalavandhan (2001). Song Lyrics penned by Vairamuthu. கடவுள் பாதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading