| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கமல்ஹாசன் | ஷங்கர் எஹ்சான் லாய் | ஆளவந்தான் |
Kadavul Paadhi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று…
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்…
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று…
மிருகம் மட்டும் வளர்கிறதே…
ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா…
நாளை மிருகம் கொல்வாயா…
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு…
மீண்டும் கடவுள் செய்வாயா…
ஆண் : குரங்கில் இருந்து மனிதன் என்றால்…
மனிதன் நிறையா கணிப்பானா…
மிருக ஜாதியில் பிறந்த மனிதா…
தெய்வ ஜோதியில் கலப்பாயா… ஹா…
—BGM—
ஆண் : நந்தகுமாரா… கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று…
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்…
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று…
மிருகம் மட்டும் வளர்கிறதே…
—BGM—
ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
காற்றில் ஏறி மலையில் ஆடி…
கவிதை பாடும் பறவை நான்…
—BGM—
ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
காற்றில் ஏறி மலையில் ஆடி…
கவிதை பாடும் பறவை நான்…
ஆண் : ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்…
உயிரில் வேர்கள் குளிர்கிறதே…
எல்லாம் துளியில் குளிரும் போதும்…
இரு துளி மட்டும் சுடுகிறதே…
ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா…
மழை நீர் சுடாது தெரியாதா…
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்…
வெந்நீர் துளி என அறிவாயா…
ஆண் : சுட்ட மழையும் சுடாத மழையும்…
ஒன்றாய் கண்டவன் நீதானே…
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையில்…
குளிக்க வைத்தவன் நீதானே…யே…
Notes : Kadavul Paadhi Song Lyrics in Tamil. This Song from Aalavandhan (2001). Song Lyrics penned by Vairamuthu. கடவுள் பாதி பாடல் வரிகள்.
