பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | சர்வம் |
Kaatrukullae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ…
காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான்…
ஆண் : மாறாதே மண்ணோடு என்றுமே…
மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல்…
தீராதே கண்ணோடு எங்குமே…
உயிரீரம் எப்போதும் என்னை போல்… என்னை போல்…
ஆண் : நடு காற்றில் தனிமை வந்ததே…
அழகிய ஆசை உணர்வு தந்ததே…
உலகம் மாறுதே…
உயிர் சுகம் தேடுதே…
ஆண் : நடு காற்றில் தனிமை வந்ததே…
அழகிய ஆசை உணர்வு தந்ததே…
உலகம் மாறுதே…
உயிர் சுகம் தேடுதே…
ஆண் : இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக…
எங்கும் பெண் காடு நீ…
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து…
சூழும் ஏகாந்தம் நீ…
ஆண் : இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக…
எங்கும் பெண் காடு நீ…
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து…
சூழும் ஏகாந்தம் நீ…
—BGM—
ஆண் : கடல் காற்றில் இதயம் தொட்டதே…
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே…
அலை மடி நீளுதே…
அதில் உன்னை ஏந்துதே…
ஆண் : கடல் காற்றில் இதயம் தொட்டதே…
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே…
அலை மடி நீளுதே…
அதில் உன்னை ஏந்துதே…
ஆண் : தாங்காதே தாகங்கள் மண்ணிலே…
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே…
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே…
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே…
—BGM—
Notes : Kaatrukullae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. காற்றுக்குள்ளே வாசம் பாடல் வரிகள்.