| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | கண்ணுக்குள் நிலவு |
Iravu Pagalai Theda Song Lyrics in Tamil
—BGM—
{ ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட… } * (2)
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…
—BGM—
ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே…
தூரம் தூரம்…
எங்கே மாறும் எங்கே சேரும்…
சொல்லும் காலம்…
ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்…
அதுவொரு காலம்…
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்…
இலையுதிர் காலம்…
ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்…
தனியாக அழகில்லையே…
கடலைச் சேரா நதியைக் கண்டால்…
தரையில் ஆடும் மீனைக் கண்டால்…
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்…
அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…
—BGM—
ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி…
எங்கே போகும்…
பூக்கள் பேச வாயிருந்தால்…
என்ன பேசும்…
ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்…
கூட்டைத் தேடும்…
பறவை போனால் பறவைக் கூடு…
யாரைத் தேடும்…
ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே…
யரோடு உறவாடுமோ…
அன்னையில்லா பிள்ளை கண்டால்…
பிள்ளையில்லா அன்னை கண்டால்…
அன்பேயில்லா உலகம் கண்டால்…
அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…
—BGM—
Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலை பாடல் வரிகள்.

