பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & சுனிதா சாரதி | ஸ்ரீனிவாஸ் | ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே |
Inni Naanum Naanilai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடி சொல்லடி…
ஆண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடி ஏனடி…
ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும்…
வேறு வேறாய்…
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு…
கொள்ள நீ வாராய்…
புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்…
அது ஏனடி…
பெண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடா சொல்லடா…
பெண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடா ஏனடா…
—BGM—
ஆண் : உன்னது கன்னத்தின் குழியினில்…
கட்டி போட்டேனா…
படுத்து கொள்ள விரும்பியதும்…
சிரித்தாய் நான் விழுந்தேன்…
பெண் : கையில் கடிகாரம் இருந்த போதும்…
என்னை மணி கேட்டதில் அட நான் விழுந்தேன்…
ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி…
ஒரு பார்வை பார்த்தாயே…
அதில்தானே நான் விழுந்தேன்…
பெண் : என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லவே நீயும்…
நல் இரவில் பரிசோடு சுவரேறி குதித்தாயே…
அப்போது நான் விழுந்தேன்…
ஆண் : எப்போது நினைத்தாலும்…
இப்போது போல் தோன்றும் அன்பே…
ஆண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடி சொல்லடி…
—BGM—
பெண் : எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல்…
வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா…
ஆண் : போதும் போதாத ஆடை நீ அணிய…
பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே…
பெண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை…
அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம்…
ஆண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை…
அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம்…
சில நாட்கள் வாழ்வோமா…
பெண் : தினம்தோறும் சில ஊடல்…
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்…
பெண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடா சொல்லடா…
பெண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடா ஏனடா…
ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும்…
வேறு வேறாய்…
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள…
நீ வாராய்…
புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்…
பெண் : அது ஏன்…
Notes : Inni Naanum Naanilai Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Vaali. இனி நானும் நான் இல்லை பாடல் வரிகள்.