இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்கோச்சடையான்

Idhayam Song Lyrics in Tamil


பெண் : செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும்…
மயிலின் முட்டையாய்…

BGM

பெண் : நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து…
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்…

BGM

பெண் : இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

பெண் : இதயம் கரைகள் மறந்து…
திசைகள் தொலைந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

ஆண் : பூப்பது மறந்தன கொடிகள்…
புன்னகை மறந்தது மின்னல்…
காய்ப்பது மறந்தது காடு…
காவியம் மறந்தது ஏடு…

ஆண் : பூப்பது மறந்தன கொடிகள்…
புன்னகை மறந்தது மின்னல்…
காய்ப்பது மறந்தது காடு…
காவியம் மறந்தது ஏடு…

பெண் : ஏனோ… ராணா ராணா…

ஆண் : யானோ நின்னை மறக்கினேன்…
நின்னை மறக்கினேன்…
நின்னை மறக்கினேன்…

BGM

பெண் : இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

ஆண் : செந்தமிழ் பிரியும் சங்கம்…
செங்கடல் பிரியும் அலைகள்…
ஒலியைப் பிரியும் காற்று…
உளியைப் பிரியும் சிற்பம்…

ஆண் : செந்தமிழ் பிரியும் சங்கம்…
செங்கடல் பிரியும் அலைகள்…
ஒலியைப் பிரியும் காற்று…
உளியைப் பிரியும் சிற்பம்…

பெண் : வாசத்துக்கேது சிறைவாசம்…

ஆண் : யானோ நின்னைப் பிரிகினேன்…
பிரிகினேன் பிரிகினேன்…
யானோ நின்னைப் பிரிகினேன்…
பிரிகினேன் பிரிகினேன்…

பெண் : சிறைகோட்டு பெரும்பயம் தூங்கி யாங்கு…
என் உயிரோ சிறிதே…
காதலோ பெரிதே…


Notes : Idhayam Song Lyrics in Tamil. This Song from Kochadaiiyaan (2014). Song Lyrics penned by Vairamuthu. இதயம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top