பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.பி.சுந்தராம்பாள் | குன்னக்குடி வைத்தியநாதன் | திருமலை தெய்வம் |
Ezhumalai Irukka Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
—BGM—
பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…
—BGM—
பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…
பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
—BGM—
பெண் : கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…
—BGM—
பெண் : மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…
பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
—BGM—
பெண் : ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…
—BGM—
பெண் : தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…
பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
Notes : Ezhumalai Irukka Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. ஏழுமலை இருக்க பாடல் வரிகள்.