பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
குழந்தை வேலன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Enthan Kuralil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…
ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…
ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
—BGM—
ஆண் : ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே…
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே…
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே…
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே…
ஆண் : நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே…
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே…
அதில் நான் என்றும் மாறாத தனி இனமே…
ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
—BGM—
ஆண் : கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே…
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே…
கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே…
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே…
ஆண் : என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே…
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே…
அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே…
ஆண் : எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே…
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே…
—BGM—
Notes : Enthan Kuralil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kuzhanthai Velan. எந்தன் குரலில் பாடல் வரிகள்.