பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சின்மயி & ராகுல் நம்பியார் | யுவன் ஷங்கர் ராஜா | தர்மதுரை |
Endha Pakkam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எந்தப்பக்கம் காணும் போதும்…
வானம் ஒன்று…
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…
பெண் : ஒரு காதல் தோல்வி காணும் போதும்…
காதல் உண்டு…
சிறு கரப்பான் பூச்சி…
தலை போனாலும் வாழ்வதுண்டு…
பெண் : அட ரோஜாப்பூக்கள் அழுதால்…
அது தேனை சிந்தும்…
என் ராஜாபையன் நீ அழுதால்…
அதில் யானம் மிஞ்சும்…
பெண் : உன் சோகம் ஒரு மேகம்…
நான் சொன்னால் அது போகும்…
உன் கண்ணீர் ஏந்தும்…
கண்ணம் நான் ஆகும்…
பெண் : எந்தப்பக்கம் காணும் போதும்…
வானம் ஒன்று…
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…
—BGM—
பெண் : எப்போதுமே இன்பம் என்றால்…
முன்னேற்றமே ஏது…
எப்போதுமே பகலாய் போனால்…
வெப்பம் தாங்காதே…
பெண் : மனசை சலவை செய்ய…
ஒரு கண்ணீர் நதிதான் உண்டு…
உன் உயிரை சலவை செய்ய…
ஒரு காதல் நதி உண்டு…
பெண் : உன் சுவாசப்பையை மாற்று…
அதில் சுத்தக்காற்றை ஏற்று…
நீ இன்னோர் உயிரில்…
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…
—BGM—
ஆண் : சந்தர்ப்பமே தீமை செய்தால்…
சந்தோஷமே ஏது…
சல்லடையில் தண்ணீர் அள்ளி…
தாகம் தீராது…
ஆண் : தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால்…
மழையாய் வந்தாய்…
நம் உறவின் பெயரே தெரியாதம்மா…
உயிரைத் தருகின்றாய்…
ஆண் : உன் உச்சந்தலையைத் தீண்ட…
ஓர் உரிமை உண்டா பெண்ணே…
உன் உள்ளங்காலில் தலையை…
சாய்த்தால் போதும் கண்ணே…
—BGM—
ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும்…
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…
ஆண் : நீ தாவித்தாவித் தாவும் போதும்…
தாய்மை உண்டு…
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும்…
நேர்மை உண்டு…
ஆண் : உன் வார்த்தைக்கு முன்னால்…
என் வாழ்வே உன் பின்னால்…
உன் மடியில்…
எந்தன் கண்ணீா் வழியுமடி…
ஆண் : உன் சோகம் ஒரு மேகம்…
நான் சொன்னால் அது போகும்…
உன் கண்ணீர் ஏந்தும்…
கண்ணம் நான் ஆகும்…
—BGM—
Notes : Endha Pakkam Song Lyrics in Tamil. This Song from Dharmadurai (2016). Song Lyrics penned by Vairamuthu. எந்தப்பக்கம் காணும் போதும் பாடல் வரிகள்.