எனதுயிரே நீயடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீர்காழி சிற்பிவிஷ்ணு ராம் & அபர்ணா நாராயணன்சரன் குமார்அதர்மக் கதைகள்

Enathuyire Neeyadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனதுயிரே நீயடி…
உனக்கெனவே நானடி…
இமைப்பொழுதும் பாரடி…
இடைவெளிகள் ஏனடி…

பெண் : எந்தன் நெஞ்சம் முழுதும் காதல் வழிகிறதே…
உனைப் பூவைப்போல தாங்க சொல்கிறதே…
மனம் பட்டாம்பூச்சி சிறகாய் மாறியதே…
உன்னால் மாற்றங்கள் நிகழ்கிறதே…

ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே…
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே…
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே…
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே…

BGM

ஆண் : உன்னை உன்னை எந்தன் கையில் ஏந்திடவா…
நித்தம் நித்தம் அன்பை வாரி வழங்கிடவா…

பெண் : அன்பே அன்பே உன்னை நெஞ்சில் தாங்கிட வா…
உனக்குள்ளே மூழ்கிட வா…

ஆண் : பூமி தூரம்தான் வானம் பக்கம்தான்…
உந்தன் விரல்கள் பிடித்தால்…

பெண் : நீண்ட பயணமாய் நாட்கள் நீளுமா…
உந்தன் வசத்தில் நானும் இருந்தால்…

ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே…
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே…
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே…
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே…


Notes : Enathuyire Neeyadi Song Lyrics in Tamil. This Song from Adharma Kadhaigal (2024). Song Lyrics penned by Seergali Sirpi. எனதுயிரே நீயடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading