| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சீர்காழி சிற்பி | விஷ்ணு ராம் & அபர்ணா நாராயணன் | சரன் குமார் | அதர்மக் கதைகள் |
Enathuyire Neeyadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எனதுயிரே நீயடி…
உனக்கெனவே நானடி…
இமைப்பொழுதும் பாரடி…
இடைவெளிகள் ஏனடி…
பெண் : எந்தன் நெஞ்சம் முழுதும் காதல் வழிகிறதே…
உனைப் பூவைப்போல தாங்க சொல்கிறதே…
மனம் பட்டாம்பூச்சி சிறகாய் மாறியதே…
உன்னால் மாற்றங்கள் நிகழ்கிறதே…
ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே…
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே…
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே…
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே…
—BGM—
ஆண் : உன்னை உன்னை எந்தன் கையில் ஏந்திடவா…
நித்தம் நித்தம் அன்பை வாரி வழங்கிடவா…
பெண் : அன்பே அன்பே உன்னை நெஞ்சில் தாங்கிட வா…
உனக்குள்ளே மூழ்கிட வா…
ஆண் : பூமி தூரம்தான் வானம் பக்கம்தான்…
உந்தன் விரல்கள் பிடித்தால்…
பெண் : நீண்ட பயணமாய் நாட்கள் நீளுமா…
உந்தன் வசத்தில் நானும் இருந்தால்…
ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே…
தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே…
ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே…
ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே…
Notes : Enathuyire Neeyadi Song Lyrics in Tamil. This Song from Adharma Kadhaigal (2024). Song Lyrics penned by Seergali Sirpi. எனதுயிரே நீயடி பாடல் வரிகள்.
