பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
வைரமுத்து | சின்மயி | விஷால் & சேகர் | ரா.1 |
En Uyir Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே…
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ… ஒ…
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ…
பெண் : நீ என் உடலுக்குள் உயிரல்லவா…
ஒரே உயிர் நாமல்லவோ…
உடல் வாழவே… ஓ…
உயிர் போகுமோ…
பெண் : இருதயம் தூளான பிறகு…
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு…
இனி எந்தன் வாழ்வே வீணோ வெறுமையோ…
பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…
பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…
—BGM—
பெண் : உன் கண்ணில்தானே நான் பார்த்துக்கொண்டேன்…
கண்ணே போனால் நான் என்ன காண்பேன்…
உன் செவியில்தானே நான் ஒலிகள் கேட்டேன்…
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்…
பெண் : கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க…
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க…
வாழ்வினை இழந்த பின் வாழ்வா… ஓ…
நீ வா…
பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…
பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…
—BGM—
பெண் : நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை…
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்…
இலையோடு வழியும் மழைநீரைப்போல…
உடலோடு ஜீவன் சொல்லாமல் போகும்…
பெண் : உயிரே நான் என்ன ஆவேன்…
உணர்வே இல்லாத கல்லாகி போவேன்…
மரணத்தை வெல்ல வழி இல்லையா…
நீ சொல்…
{ பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன… } *(4)
Notes : En Uyir Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. என் உயிர் பாடல் வரிகள்.