என் உயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துசின்மயிவிஷால் & சேகர்ரா.1

En Uyir Song Lyrics in Tamil


BGM

பெண் : என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே…
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ… ஒ…
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ…

பெண் : நீ என் உடலுக்குள் உயிரல்லவா…
ஒரே உயிர் நாமல்லவோ…
உடல் வாழவே… ஓ…
உயிர் போகுமோ…

பெண் : இருதயம் தூளான பிறகு…
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு…
இனி எந்தன் வாழ்வே வீணோ வெறுமையோ…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : உன் கண்ணில்தானே நான் பார்த்துக்கொண்டேன்…
கண்ணே போனால் நான் என்ன காண்பேன்…
உன் செவியில்தானே நான் ஒலிகள் கேட்டேன்…
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்…

பெண் : கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க…
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க…
வாழ்வினை இழந்த பின் வாழ்வா… ஓ…
நீ வா…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன…

BGM

பெண் : நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை…
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்…
இலையோடு வழியும் மழைநீரைப்போல…
உடலோடு ஜீவன் சொல்லாமல் போகும்…

பெண் : உயிரே நான் என்ன ஆவேன்…
உணர்வே இல்லாத கல்லாகி போவேன்…
மரணத்தை வெல்ல வழி இல்லையா…
நீ சொல்…

{ பெண் : மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று…
விழுந்தது என்ன…
மலைதான் கொண்ட அருவிகள் ரெண்டும்…
அழுவதுமென்ன… } *(4)


Notes : En Uyir Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. என் உயிர் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top