என் புருஷன்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. சைலஜா & சசி ரேகாஇளையராஜாகோபுரங்கள் சாய்வதில்லை

En Purushan Thaan Song Lyrics in Tamil


பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…

BGM

பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…

பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…

BGM

பெண் : வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி…
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி…
வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி…
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி…

பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு…
வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ…
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ…
விட்டு விட்டுப் போனானே…

பெண் : ஒன் புருஷன்தான்…
உனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் அத நீ மறக்காதே…
ஒன் மனக் கதவ திறந்து வச்சு காத்திருந்தாலே…
மன்னவனும் வருவாரே…

BGM

பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி…
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி…
பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி…
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி…

பெண் : பெண் பாவம் பொல்லாது…
அவன் காலம் நில்லாது…
காண்பாய் இதை நீயே…

பெண் : உன் ஆசை கண்ணாளன்…
யார் என்று நீ சொன்னால்…
கொண்டு வந்து சேர்ப்பேனே…

பெண் : என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…


Notes : En Purushan Thaan Song Lyrics in Tamil. This Song from Gopurangal Saivathillai (1982). Song Lyrics penned by Muthulingam. என் புருஷன்தான் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top