பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா | இளையராஜா | சிட்டுக்குருவி |
En Kanmani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…
ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ…
பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…
ஆண் : என் கண்மணி…
—BGM—
ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா…
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா…
பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்…
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்…
ஆண் : இளமா மயில்…
பெண் : அருகாமையில்…
ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று…
அனுபவம் சொல்லவில்லையோ…
ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ…
பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…
ஆண் : என் கண்மணி…
—BGM—
ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு…
ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே…
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே…
பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே…
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே…
ஆண் : இரு தோளிலும் மணமாலைகள்…
பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று…
தவிக்கின்ற தவிப்பென்னவோ…
ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…
பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…
ஆண் : என் கண்மணி…
Notes : En Kanmani Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. என் கண்மணி பாடல் வரிகள்.