Category Archives: தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்

aariro-song-lyrics-deiva-thiirumagal

ஆரிரோ ஆராரிரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Aariro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM


Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள்.


விழிகளில் ஒரு வானவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Vizhigalil Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…

பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…

பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…

பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…

பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…

BGM


Notes : Vizhigalil Oru Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள்.