பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | தெய்வத்திருமகள் |
Vizhigalil Oru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…
பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
—BGM—
பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…
பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…
பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
—BGM—
பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…
பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…
பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…
—BGM—
Notes : Vizhigalil Oru Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள்.