பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன் | கார்த்திக் ராஜா | மனதோடு மழைக்காலம் |
Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil
ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…
ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…
—BGM—
ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…
ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…
ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
—BGM—
ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…
—BGM—
பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…
ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…
ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
—BGM—
ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…
—BGM—
பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…
ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…
ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…
பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…
ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.