Category Archives: உள்ளம் கேட்குமே

ஓ மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்உள்ளம் கேட்குமே

Oh Maname Song Lyrics in Tamil


ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

BGM

ஆண் : மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து…
வானத்தில் உறங்கிட ஆசையடி…
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து…
முள்ளுக்குள் எரிந்தது காதலடி…

ஆண் : கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்…
கணுக்க தோறும் முத்தம்…
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்…
கைகள் முழுக்க ரத்தம்…

ஆண் : துளைகள் இன்றி நாயனமா…
தோல்விகள் இன்றி பூரணமா…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

BGM

ஆண் : இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து…
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை…
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து…
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை…

ஆண் : இன்பம் பாதி துன்பம் பாதி…
இரண்டும் வாழ்வின் அங்கம்…
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்…
நகையாய் மாறும் தங்கம்…

ஆண் : தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி…
வெற்றிக்கு அதுவே ஏணியடி…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…


Notes : Oh Maname Song Lyrics in Tamil. This Song from Ullam Ketkumae (2005). Song Lyrics penned by Vairamuthu. ஓ மனமே பாடல் வரிகள்.


mazhai-mazhai-song-lyrics-in-tamil-ullam-ketkumae

மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்உள்ளம் கேட்குமே

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது…
உள் நெஞ்சிலே போர் வந்தது…

ஆண் : பூ வந்தது பூ வந்தது…
கை வீசிடும் பூ வந்தது…
தீ வந்தது தீ வந்தது…
பூ கண்களில் தீ வந்தது…

ஆண் : ஏன் வந்தது ஏன் வந்தது…
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்…
பெண் வந்ததும் பெண் வந்ததும்…
உன் சூழலில் சத்தம் சத்தம்…

BGM

ஆண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

ஆண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

ஆண் : என்ன திண்மை… ம்ம் ஹ்ம்ம்…
என்ன வன்மை… ம்ம் ஹ்ம்ம்…
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்…
போக போக புரிகின்ற போர்களம்…
ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடைய செய்…

பெண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

பெண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

பெண் : எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம்…
நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்…
ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடையச் செய்…

ஆண் : யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது…
உள் நெஞ்சிலே போர் வந்தது…

ஆண் : பூ வந்தது பூ வந்தது…
கை வீசிடும் பூ வந்தது…
தீ வந்தது தீ வந்தது…
பூ கண்களில் தீ வந்தது…

ஆண் : ஏன் வந்தது ஏன் வந்தது…
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்…
பெண் வந்ததும் பெண் வந்ததும்…
உன் சூழலில் சத்தம் சத்தம்…

BGM

ஆண் : நீ மட்டும் என்றால்…
உடலோடு உடல் மாற்றம் செய்வேனே…

பெண் : நீ மட்டும் போ என்றால்…
அப்போதே உயிர் விட்டு செல்வேனே…

ஆண் : அடி பருவ பெண்ணே நீயும்…
ஒரு பங்கு சந்தை போலே…
சில ஏற்ற இறக்கங்கள்…
அட உந்தன் மேனி மேலே…

பெண் : பூவின் உள்ளே ஒரு தாகம்…
உன் உதடுகள் தா…

ஆண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

ஆண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

BGM

பெண் : தீண்டாமல் சருகாவேன்…
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்…

ஆண் : ஐயோடி நான் கல்லாவேன்…
உளியாக நீ வந்தால் கலையாவேன்…

பெண் : ஹே… நீயும் ஓடி வந்து…
என்னை தீண்ட தீண்ட பாரு…
ஒரு பாதரசம் போல…
நான் நழுவி செல்வேன் தேடு…

ஆண் : ஏதோ ஏதோ வலி…
எந்தன் ஐம்புலன்களில் ஏன்…

பெண் : மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை…
நீ முதல் மழை…

பெண் : அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை…
நீ முதல் அலை…

ஆண் : எந்த பெண்ணும் அதிசய விண்கலம்…
போக போக புரிகின்ற போர்களம்…

ஆண் & பெண் : ஒன்று செய்…
இப்போதே உள் நெஞ்சை உடைய செய்…

BGM


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Ullam Ketkumae (2005). Song Lyrics penned by Vairamuthu. மழை மழை பாடல் வரிகள்.