Category Archives: காதல் சடுகுடு

Megathil Ondrai Nindrom Song Lyrics in Tamil

மேகத்தில் ஒன்றாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாகாதல் சடுகுடு

Megathil Ondrai Nindrom Song Lyrics in Tamil


ஆண் : மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…

BGM

ஆண் : மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை…
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை…

ஆண் : மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி…
வானில் சேர்ந்திடுவோம்…
இருவரும் கூடி ஒருதுளி ஆகி…
முத்தாய் மாறிடுவோம்…

ஆண் : மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…

BGM

பெண் : கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்…
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்…
ஆசை கொண்டு உன் ஆண்மையை காதலித்தேன்…
மீசை கொண்டு உன் மென்மையை காதலித்தேன்…

BGM

ஆண் : நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்…
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்…
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்…
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்…

பெண் : கல்லா சிலநாள் தெரிவோம்…
அதனால் உறவா செத்துவிடும்…
கடல் நீர் கொஞ்சம் மேகமானால்…
கடலா வற்றிவிடும்…

ஆண் : வெளியூர் போகும் காற்றும்…
ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்…
பிரிதல் என்பது இலையுதிர் காலம்…
நிச்சியம் வசந்தம் வரும்…

ஆண் : மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…

BGM

பெண் : அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன்…
நிலா வந்தால் என் இரவுகள் இறங்கிருப்பேன்…
உன்னை எண்ணி என் உயிர்கலம் உடைந்திருப்பேன்…
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன்…

BGM

ஆண் : அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன்…
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்…
பெண்ணே பெண்ணே நம் பிரிவினில் துணை இருப்பேன்…
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்…

பெண் : இத்தனை பிரிவு தகுமா என்று…
இயற்கையை கண்டிக்கிறேன்…
ஏன் தான் அவனை கண்டாய் என்று…
கண்களை தண்டிக்கிறேன்…

ஆண் : பிரியும் போதே பிரிவும் வளரும்…
பிரிந்தே சிந்திப்போம்…
வாழ்க்கை என்பது வட்ட சாலை…
மீண்டும் சந்திப்போம்…

ஆண் : மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…

பெண் : பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை…
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை…

ஆண் : மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி…
வானில் சேர்ந்திடுவோம்…
இருவரும் கூடி ஒருதுளி ஆகி…
முத்தாய் மாறிடுவோம்…

BGM


Notes : Megathil Ondrai Nindrom Song Lyrics in Tamil. This Song from Kadhal Sadugudu (2003). Song Lyrics penned by Vairamuthu. மேகத்தில் ஒன்றாய் பாடல் வரிகள்.