Category Archives: சுபாஷ்

சுபாஷ் – Subash (1996)

தென்றல் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Thendral Vandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : இது கனவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : இல்லை நினைவா…
பெண் : ஓஓ ஓ…

பெண் : புது உறவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : சுகம் வரவா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

பெண் : மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று…
கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா…

ஆண் : நந்தவன வண்டு மோகம் அது உண்டு…
மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டுவிட்டதா…

பெண் : பருவ புயலிலே உடையும் நழுவுதே… ஆஆ…
ஆண் : பொழியும் பனியிலே இதயம் இளகுதே…

பெண் : இவள் வசமா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : கனி ரசமா…
ஆண் : ஆஆ ஆ…

ஆண் : இனம் புரியா…
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா… ஹ்ம்ம்…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

ஆண் : சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு…
செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா…

பெண் : செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு…
சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா…

ஆண் : விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா…
பெண் : குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா…

ஆண் : கனிசுலையா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : புது சுவையா…
பெண் : ஆஆ ஆ…

பெண் : இதழ் வழியா…
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா… ஹ்ம்ம்…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : இது கனவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : இல்லை நினைவா…
ஆண் : ஓஓ ஓ…

ஆண் : புது உறவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : சுகம் வரவா…


Notes : Thendral Vandhu Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. தென்றல் வந்து பாடல் வரிகள்.


முகம் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Mugam Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

ஆண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
ஆண் : விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

BGM

பெண் : விரல்கள் தீண்ட மெழுகாய் ஆனேன்…
விலகி இருந்தால் என்ன…

ஆண் : உறவை தேடும் உயிரை நானும்…
உருகி கிடந்தால் என்ன…

பெண் : இது ஆசை பேச்சா என்ன…
நான் வாங்கும் மூச்சா என்ன…

ஆண் : இள வேனில் காற்றா என்ன…
இவள் தேனின் ஊற்றா என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

BGM

ஆண் : மார்பில் நீந்தும் நிலவே உன்னை…
வானம் மறந்தால் என்ன…

பெண் : இதய கதவை திறந்தேன் மெல்ல…
நானும் கரைந்தால் என்ன…

ஆண் : வரும் கால வரலாற்றிலே…
இனி நாமும் கலந்தால் என்ன…

பெண் : இதை மீறும் காதல் இல்லை…
என பாடம் உரைத்தால் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

ஆண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

பெண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…


Notes : Mugam Enna Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. முகம் என்ன பாடல் வரிகள்.