Category Archives: திருமூர்த்தி

senguruvi-senguruvi-song-lyrics-in-tamil

செங்குருவி செங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாதிருமூர்த்தி

Senguruvi Senguruvi Song Lyrics in Tamil


ஆண் : சிறுவாணி தண்ணியபோல்…
சிளுசிளுனு சிரித்திருக்கும்…
கடையாணி சக்கரம் போல்…
கண்ணிரெண்டும் சுத்திவரும்…

ஆண் : மருதானி சிவப்பாட்டம்…
மணிகண்ணம் மின்னி வரும்…
மகராசி அழகை எல்லாம்…
மலர்காத்து பாடி வரும்…

BGM

ஆண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

ஆண் : ஒத்திகைக்குப் போவமா…
ஒத்துமையா ஆவமா…

குழு : முத்திரைய போடம்மா…
முத்தமிட்டு பாடம்மா…

ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…
வச்சா என்ன ஓரமா…

பெண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

BGM

ஆண் : வெண் பருத்தி நூலெடுத்து…
வாய் வெடிச்ச பூவெடுத்து…
நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச…
நளினமான மாலையிது…

குழு : தன தனன‌னா தனன‌னா…
தன தனன‌னா தனன‌னா…

பெண் : சென்னிமல தேனெடுத்து…
செங்கரும்பின் சாறெடுத்து…
நீ பருகிட கலந்து வச்ச…
நெருக்கமான வேளையிது…

குழு : தன தனன‌னா தனன‌னா…
தன தனன‌னா தனன‌னா…

ஆண் : ஆ… ராசாத்தி ஒடம்பிருக்கும்…
ரவிக்க துணி நானாக…
அன்னாடம் சூடிக்கொள்ள…
ஆச வச்சா ஆகாதா…

பெண் : ஆத்தாடி மறைஞ்சிருக்கும்…
அழகையெல்லாம் நீ பாத்தா…
ஏம்மானம் ரெக்க கட்டி…
எட்டுத்திக்கும் போகாதா…

ஆண் : அடி சீனி சக்கரையே…
எட்டி நீயும் நிக்கிறியே…
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ…
ராங்கு பண்ணுறியே…

குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

BGM

பெண் : கள்ளழகர் வைகையிலே…
கால் பதிக்கும் வேளையிலே…
பால் நிலவில் படுத்திகிட்டு…
பருவராகம் பாடனுமே…

குழு : தன தனன‌னா தனன‌னா…
தன தனன‌னா தனன‌னா…

ஆண் : சொக்கனுக்குப் பக்கத்திலே…
சோடி என்று வந்தவளே…
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு…
நெனச்ச தாளம் போடனுமே…

குழு : தன தனன‌னா தனன‌னா…
தன தனன‌னா தனன‌னா…

பெண் : ஆனாலும் உனக்கு ரொம்ப…
அவசரம்தான் மாமாவே…
ஒன்னாக கூடும்போது…
ஊர் முழுக்கப் பாக்காதா…

ஆண் : பாத்தாலும் தவறு இல்ல…
பனி உறங்கும் ரோசாவே…
முன்னால சோத்த வச்சா…
மூக்குலதான் வேக்காதா…

பெண் : என்ன வாட்ட எண்ணுறியே…
கைய கோத்து பின்னுறியே…
உன் பாட்டப் பாடி பலவிதமா…
சேட்ட பண்ணுறியே…

ஆண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…

பெண் : ஒத்திகைக்குப் போவமா…
ஒத்துமையா ஆவமா…

குழு : முத்திரைய போடலாம்…
முத்தமிட்டு பாடலாம்…

ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…
வச்சா என்ன ஓரமா…

குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…


Notes : Senguruvi Senguruvi Song Lyrics in Tamil. This Song from Thirumoorthy (1995). Song Lyrics penned by Vaali. செங்குருவி செங்குருவி பாடல் வரிகள்.