பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | காத்திருக்க நேரமில்லை |
Vaa Kathirukka Neramillai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
ஆண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…
பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நான் பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
—BGM—
ஆண் : ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே… ஹா…
காந்தம் உருவாகுமடி கூடும் இளம் ஜோடியிலே…
பெண் : வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது…
வலிக்காது சீராட்டு சலிக்காது பூ மாது…
ஆண் : ஆசை ஊற்று போலே வெள்ளமாக பாயும் நேரமே…
ஆடை ஈரம் ஆக நீயும் நானும் நீந்த வேண்டுமே…
பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நான் பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
பெண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…
ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
—BGM—
பெண் : மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத்தேடி வரும்…
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத்தாண்டி வரும்…
ஆண் : இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது…
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது…
பெண் : அன்பே நீல வண்ணம் வானை என்றும் நீங்கிடாது…
மீட்டும் விரல் இல்லாது வாழ்வதேது வீணையானது…
ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
பெண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…
ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
பெண் : நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
Notes : Vaa Kathirukka Neramillai Song Lyrics in Tamil. This Song from Kathirukka Neramillai (1993). Song Lyrics penned by Vaali. வா காத்திருக்க நேரம் இல்லை பாடல் வரிகள்.