Category Archives: வில்லுபாட்டுக்காரன்

Solai Malai Ooram Song Lyrics in Tamil

சோலைமலை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவில்லுபாட்டுக்காரன்

Solai Malai Ooram Song Lyrics in Tamil


ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

BGM

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

BGM

ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே…
படிப்பேனே நம் காதல் தேவாரமே…
உன் பேரை நான் பாட தேனூறுமே…
என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே…

ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே…
தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே…
காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே…

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

ஆண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…

BGM

பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா…
நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா…
வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான்…
வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான்…

பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்…
சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும்…
கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும்…

ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்…
பாட்டுச் சத்தம் கேட்கலையோ…
பாடி வரும் குயிலே நீ வா வா…
தேடி வரும் மயிலே நீ வா வா…

பெண் : சோலைமலை ஓரம்…
கோலக் குயில் பாடும்…


Notes : Solai Malai Ooram Song Lyrics in Tamil. This Song from Villu Pattukaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. சோலைமலை ஓரம் பாடல் வரிகள்.


கலைவாணியோ ராணியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவில்லுபாட்டுக்காரன்

Kalaivaaniyo Raaniyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…

ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…

BGM

ஆண் : பாதம் தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட…
வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட…
பாதங்கள பாத்ததுமே பார்வ வலிய மேலே…
வேதனைகள மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல…

ஆண் : பூத்ததய்யா பூவு அது கையழகு…
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு…
நான் வந்தேன் வாழ்த்திப் பாட…
நல்லத சொன்னேன் ராகத்தோட…

ஆண் : கண்டேன் சீதைப்போல…
கண்டதும் நின்னேன் சிலையப் போல…
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற…

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…

ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…

BGM

ஆண் : கோடை மழை கொண்டு வரும்…
கூந்தல் என்கிற மேகம்…
ஜாடையில ஏத்தி விடும்…
தாகம் என்கிற மோகம்…

ஆண் : கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி…
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி…

ஆண் : தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா…
ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா…

ஆண் : நல்ல பளிங்கு போல சிரிப்பு…
மனசப் பறிக்கும் பவள விரிப்பு…
விளங்கிடாத இனிப்பு…
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு…

ஆண் : சந்திர ஜோதி வந்தது போல…
சுந்தர தேவி ஜொலிப்பு…

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…

ஆண் : அவ மேலழகும் தண்டக் காலழகும்…
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்…

ஆண் : கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ…
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ…


Notes : Kalaivaaniyo Raaniyo Song Lyrics in Tamil. This Song from Villu Pattukaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. கலைவாணியோ ராணியோ பாடல் வரிகள்.