Category Archives: வசந்தகால பறவை

Semparuthi Semparuthi Song Lyrics in Tamil

செம்பருத்தி செம்பருத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாவசந்தகால பறவை

Semparuthi Semparuthi Song Lyrics in Tamil


ஆண் : கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்…
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்…
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே…
கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல்…

BGM

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலன தேடி வந்தால்…
கண்ணில் வண்ண மை எழுதி…

ஆண் : மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடைதான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்…
நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும்…
நூலகம்தான்…

பெண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…

BGM

ஆண் : பள்ளியறை நான்தானே…
பாரிஜாத பூந்தேனே…
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே…

பெண் : கற்றுக் கொடு கண்ணாலே…
கன்னி மயில் உன்னாலே…
என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே…

ஆண் : பருவ கனவு பிறக்கும் பொழுது…
இறகு முளைத்துபறக்கும் மனது…

பெண் : உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு…
கரையை கடக்கும் நதிகள் இரண்டு…

ஆண் : இமைதானே கண்ணை சேர்ந்தது…
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது…

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…

BGM

பெண் : எப்பொழுதும் எந்நாளும்…
உன்னுடைய பூபாளம்…
இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம்…

ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும்…
மின்னல் ஒன்று கை காட்டும்…
அம்மம்மா என்னைதான் ஆசைகளில் நீராட்டும்…

பெண் : எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்…
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்…

ஆண் : இரவும் பகலும் உறவை வளர்க்கும்…
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்…

பெண் : விலகாது சொந்தமானது…
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது…

பெண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலனை தேடி வந்தாள்…
கண்ணில் வண்ண மை எழுதி…

பெண் : மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்…
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்…
கை தொடும் மேனி எங்கும் காவிரி போல்…
பாய்ந்திடத்தான்…

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…


Notes : Semparuthi Semparuthi Song Lyrics in Tamil. This Song from Vasanthakala Paravai (1991). Song Lyrics penned by Vaali. செம்பருத்தி செம்பருத்தி பாடல் வரிகள்.