பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா & உமா ரமணன் | இளையராஜா | மல்லுவேட்டி மைனர் |
Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…
பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி…
இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…
ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…
ஆண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா…
அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன்…
பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…
—BGM—
ஆண் : எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…
எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…
ஆண் : நானாக போட்ட விதை முளைச்சுதடா நேத்து…
நீயேனும் திருந்தி நட என் கதையப் பார்த்து…
ஆண் : பொய் மான புள்ளி மானுன்னு நம்பிகிட்டா…
ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா…
இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா…
ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…
—BGM—
பெண் : ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…
ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…
பெண் : தீ மேல கைய வச்சு சுட்டுகிட்ட பாவம்…
உன் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம்…
பெண் : பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே…
என் அம்மானே என்னை சொல்லுல கொல்லுறியே…
என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே…
பெண் : ஆஆ… சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…
பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி…
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…
—BGM—
Notes : Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil. This Song from Mallu Vetti Minor (1990). Song Lyrics penned by Gangai Amaren. சின்னமணி பொண்ணுமணி பாடல் வரிகள்.