Category Archives: கடலோரக் கவிதைகள்

Adi Aathadi Song Lyrics in Tamil

அடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Adi Aathadi Song Lyrics in Tamil


பெண் : அடி ஆத்தாடி…

—BGM—

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி அம்மாடி…

BGM

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்…
கட்டுப்பட்டு ஆடாதோ…
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்…
மெட்டுக்கட்டிப் பாடாதோ…

ஆண் : இப்படி நான் ஆனதில்லை…
புத்தி மாறிப் போனதில்லை…
முன்னே பின்னே நேர்ந்ததில்லை…
மூக்கு நுனி வேர்த்ததில்லை…

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள…
கத்திச் சண்டை கண்டாயோ…
படபடக்கும் நெஞ்சுக்குள்ள…
பட்டாம்பூச்சி பார்த்தாயோ…
இசை கேட்டாயோ… ஓஓஓ…

BGM

பெண் : லலலலலா… லலலலல…
லலலல லலா… லலல லா லலல லா…
லலலலல… லலலலல… லலலல லா…

BGM

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள…
ஏகப்பட்ட சந்தோசம்…
உண்மை சொல்லு பெண்ணே என்னை…
என்ன செய்ய உத்தேசம்…

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்…
வந்து வந்து போவதென்ன…
கட்டுமரம் பூப்பூக்க…
ஆசைப்பட்டு ஆவதென்ன…

ஆண் : கட்டுத்தறி காளை நானே…
கன்னுக்குட்டி ஆனேனே…
தொட்டுத் தொட்டு தென்றல் பேச…
தூக்கம் கெட்டுப் போனேனே…
சொல் பொன்மானே… ஏஏஏ…

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி ஆத்தாடி…


Notes : Adi Aathadi Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி ஆத்தாடி பாடல் வரிகள்.


கொடியிலே மல்லியப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil


ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

BGM

பெண் : மனசு தடுமாறும்…
அது நெனைச்சா நிறம் மாறும்…
மயக்கம் இருந்தாலும்…
ஒரு தயக்கம் தடை போடும்…

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி காயும்…
மாடு ரெண்டு பாதை ரெண்டு…
வண்டி எங்கே சேரும்…

பெண் : பொத்தி வச்சா அன்பு இல்ல…
சொல்லிப்புட்டா வம்பு இல்ல…
சொல்லத்தானே தெம்பு இல்ல…
இன்ப துன்பம் யாரால…

BGM

ஆண் : பறக்கும் திசையேது…
இந்த பறவை அறியாது…
உறவோ தெரியாது…
அது உனக்கும் புரியாது…

பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு…
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு…

ஆண் : காலம் வரும் வேளையிலே…
காத்திருப்பேன் பொன்மயிலே…

பெண் : தேதி வரும் உண்மையிலே…
சேதி சொல்வேன் கண்ணாலே…

பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…


Notes : Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. கொடியிலே மல்லியப்பூ பாடல் வரிகள்.