பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா | சங்கர் கணேஷ் | சிவப்பு மல்லி |
Rendu Kannam Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…
பெண் : தானானான தானானா னானா…
தானா தானன தானா தானன தானனனானா…
தானா தானன தானா தானன தானனனானா…
ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
—BGM—
பெண் : எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்…
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்…
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்…
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்…
ஆண் : உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்…
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்…
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்…
பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
குழு : தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…
—BGM—
பெண் : இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே…
இருளே இவளின் துணையே…
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே…
இருளே இவளின் துணையே…
ஆண் : தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே…
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே…
தொடாதே தொடாதே…
பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
—BGM—
ஆண் : தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ…
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ…
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ…
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ…
பெண் : நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ…
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ…
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ…
ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பெண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
ஆண் : தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
ஆண் & பெண் : தானானனா தானாதனா தானானானனா…
தானானனா தானாதனா தானானானனா…
Notes : Rendu Kannam Song Lyrics in Tamil. This Song from Sivappu Malli (1981). Song Lyrics penned by Vairamuthu. ரெண்டு கன்னம் பாடல் வரிகள்.