பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | அருண்மொழி & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பொங்கி வரும் காவேரி |
Velli Golusu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
ஆண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…
பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
—BGM—
பெண் : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்…
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்…
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச…
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்…
ஆண் : பொன்னி நதிப்போல நானும் உன்ன…
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா…
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண…
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா…
பெண் : காத்து காத்து நானும்…
பூத்துப் பூத்துப் போனேன்…
சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்…
ஆண் : உன் பேரச்சொல்லி பாடி வச்ச…
ஊறுதம்மா தேனே…
பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
ஆண் : கூடாம கூட வச்சு சேத்ததென்ன…
—BGM—
ஆண் : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த…
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்…
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்…
வாங்கினது நல்ல வரம்தான்…
பெண் : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்…
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்…
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்…
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்
ஆண் : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு…
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு…
பெண் : காலமெல்லாம் கேட்டிடத்தான்…
காத்திருக்கேன் பாத்து…
ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
பெண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…
ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
Notes : Velli Golusu Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. வெள்ளி கொலுசு மணி பாடல் வரிகள்.