Category Archives: நூறாவது நாள்

நூறாவது நாள் – Nooravathu Naal (1984)

விழியிலே மணி விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநூறாவது நாள்

Vizhiyile Mani Song Lyrics in Tamil


ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
பெண் : ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

BGM

ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

பெண் : ஓஓஓ… அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்…
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…

BGM

ஆண் : கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது…
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது…

ஆண் : இவள் ரதியினம் உடல் மலர்வனம்…
இதழ் மரகதம் அதில் மதுரசம்…
இவள் காமன் வாகனம்…
இசை சிந்தும் மோகனம்…
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
ஆண் : பா பா பா பா…
பெண் : லா லா லா லா…

BGM

பெண் : காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி…
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி…
இன்பச் சுகவரி அன்பின் முகவரி…
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி…

பெண் : மழலை அன்னம் மாதிரி…
மடியில் தூங்க ஆதரி…
விடிய விடிய என் பேரை உச்சரி…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

ஆண் : ஓஓஓ… அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்…
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்…

ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…


Notes : Vizhiyile Mani Song Lyrics in Tamil. This Song from Nooravathu Naal (1984). Song Lyrics penned by Pulamaipithan. விழியிலே மணி விழியில் பாடல் வரிகள்.