Category Archives: நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

நெஞ்சிலே துணிவிருந்தால் (1981) – Nenjile Thunivirunthal (1981)

சித்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & வசந்தாசங்கர் கணேஷ்நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

Chitrame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

BGM

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : படை கொண்ட மன்னன் கூட…
பசி கொண்டு தள்ளாட…
பாவை உந்தன் பருவம் இன்று…
பதில் சொல்லுமோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

BGM

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்…
கவி ஒன்று மலராதோ…
விடை சொல்ல விடியும் காலை…
வரும் அல்லவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…


Notes : Chitrame Song Lyrics in Tamil. This Song from Nenjile Thunivirunthal (1981). Song Lyrics penned by Vairamuthu. சித்திரமே பாடல் வரிகள்.