Category Archives: நான் போட்ட சவால்

நான் போட்ட சவால் – Naan Potta Savaal (1980)

சுகம் சுகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புரட்சிதாசன்மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்இளையராஜாநான் போட்ட சவால்

Sugam Sugame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே…
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா…

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணா…
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா…
சுகம் சுகமே…

BGM

பெண் : துள்ளத் துள்ள காதல்…
அள்ளிக் கொள்ள ஆசை…
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா…

ஆண் : மோகனப் புன்னகை கண்டேன்…
முத்துச் சரம் கண்டு நின்றேன்…

பெண் : தேன் மழை போல் என…
வாலிப நாள் வருமா… ஆஆஆ…

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே… ஏஏஏ…

BGM

ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே…
வாச மலர் போலே…
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா…

பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன்…
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்…

ஆண் : பஞ்சணை பால் பழம்…
நீ தரும் நாள் வருமா… ஆஆஆ…

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே… ஏஏஏ…

BGM

பெண் : அந்தி வெயில் மாலை…
ஆற்றங்கரை சோலை…
விந்தை என்ன என்றால் விடை வருமா…

ஆண் : பொங்கிய தாமரை கண்டேன்…
பொன்முகம் கண்டே நின்றேன்…

பெண் : அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா… ஆஆஆ…

ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே…
தொடும் முன்னே சுகம் கண்ணே…

பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா…
ஆண் & பெண் : சுகம் சுகமே… ஏஏஏ…


Notes : Sugam Sugame Song Lyrics in Tamil. This Song from Naan Potta Savaal (1980). Song Lyrics penned by Puratchidasan. சுகம் சுகமே பாடல் வரிகள்.