Category Archives: இங்கேயும் ஒரு கங்கை

இங்கேயும் ஒரு கங்கை – Ingeyum Oru Gangai (1984)

சோலைப் புஷ்பங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலா & கங்கை அமரன்இளையராஜாஇங்கேயும் ஒரு கங்கை

Solai Pushpangale Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…
சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

பெண் : கண்ணாளனைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

BGM

பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா…

ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா…
கங்கை வற்றி விடுமா…

பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…
உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு…
கொக்கு ஒண்ணு காத்திருக்குது…
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

ஆண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

BGM

பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா…
சொந்தம் மாறி விடுமா…
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா…
தன்னை விற்று விடுமா…

ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…

பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்…
கல்யாணமாம் சாமி…

ஆண் : காவலுக்கு நாதி இல்லையா…
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
பெண் : என் வேதனை சொன்னாலென்ன…
ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…


Notes : Solai Pushpangale Song Lyrics in Tamil. This Song from Ingeyum Oru Gangai (1984). Song Lyrics penned by Vairamuthu. சோலைப் புஷ்பங்களே பாடல் வரிகள்.