பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா | இளையராஜா | தாயம் ஒண்ணு |
Manathile Oru Paattu Song Lyrics in Tamil
ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
—BGM—
ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
இது பூபாளம் புது ஆலோலம்…
விழிப் பூவும் மலரும் காலை நேரம்…
ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
—BGM—
ஆண் : காற்று பூவோடு கூடும்…
காதல் சங்கீதம் பாடும்…
பார்த்து என்னுள்ளம் தேடும்…
பாசம் அன்போடு மூடும்…
ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…
இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…
ஆண் : இமைகளில் பல தாளம்…
இசைகளை அது கூறும்…
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்துப் பார்த்து…
பார்வை வாடும்…
பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
—BGM—
பெண் : நீயும் நூறாண்டு வாழ…
நேரம் பொன்னாக மாற…
நானும் பாமாலை போட…
தோளில் நான் வந்து சூட…
பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…
எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…
பெண் : இது ஒரு சுக ராகம்…
இதில் வரும் பல பாவம்…
இனிமைகள் தொடர்கதை…
இனி சோகம் ஏது சேரும் போது…
ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
பெண் : இது பூபாளம் புது ஆலோலம்…
ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம்…
ஆண் & பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
Notes : Manathile Oru Paattu Song Lyrics in Tamil. This Song from Dhayam Onnu (1988). Song Lyrics penned by Gangai Amaran. மனதிலே ஒரு பாட்டு பாடல் வரிகள்.