Category Archives: வைதேகி காத்திருந்தாள்

Kaathirunthu Song Lyrics in Tamil

காத்திருந்து காத்திருந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Kaathirunthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

பெண் : ஆஆ… ஆரிரோ… ஆரிரோ…
ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…

பெண் : தங்க சலங்க கொண்டு தாய்மாமன் வருவாரு…
பொண்ணு மணியும் கொண்டு பொன்கூட தருவாரு…
பொழுதோட தூங்கு கண்ணே… ஆரி ஆரிரோ…
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்… ஆரி ஆரிரோ…

BGM

ஆண் : ஆஆ… ஹா… ஆஆ…ஹா..ஆஆ…
முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே…
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே…
வச்சதிப்போ காணாம நானே தேடுறேன்…
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்…

ஆண் : நான் படிக்கும் மோகனமே…
நான் படைச்ச சீதனமே…
தேன் வடிச்ச பாத்திரமே…
தென்மதுர பூச்சரமே…
கண்டது என்னாச்சு…
கண்ணீரில் நின்னாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

BGM

ஆண் : நீரு நிலம் நாலு பக்கம்…
நான் திரும்பி பாத்தாலும்…
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்…
அத்தனையும் நீயாகும்…

ஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற…
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற…

ஆண் : ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச…
யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச…
உள்ளமும் புண்ணாச்சு…
காரணம் பெண்ணாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…


Notes : Kaathirunthu Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. காத்திருந்து காத்திருந்து பாடல் வரிகள்.


அழகு மலர் ஆட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & டி.எஸ்.ராகவேந்திராஇளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Azhagu Malar Ada Song Lyrics in Tamil


ஆண் : சா… ஸா…
மக மக சா மக மக சா சா…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஆகாயம் இல்லாமலே…
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது…
ஆதாரம் இல்லாமலே…
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது…

பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று…
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது…
விடியாத இரவேதும் கிடையாது என்று…
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது…

பெண் : வசந்தம் இனி வருமா…
வாழ்வினிமை பெருமா…
ஒரு பொழுது மயக்கம்…
ஒரு பொழுது கலக்கம்…
பதில் ஏதும் இல்லாத கேள்வி…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஊதாத புல்லாங்குழல்…
எனதழகு சூடாத பூவின் மடல்…
தேய்கின்ற மஞ்சள் நிலா…
ஒரு துணையை தேடாத வெள்ளை புற…

பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்…
பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது…
நீரூற்று பாயாத நிலம்போல நாலும்…
என் மேனி தரிசாக கிடக்கின்றது…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…
வேறென்ன நான் செய்த பாவம்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM


Notes : Azhagu Malar Ada Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. அழகு மலர் ஆட பாடல் வரிகள்.


ராசாத்தி உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Rasathi Unna Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

ஆண் : பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : தத்தித் தவழும் தங்கச் சிமிழே…
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே…
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்…
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு…
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு…
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : அத்தை மகளோ… மாமன் மகளோ…
சொந்தம் எதுவோ… பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
காத்தாடி போலாடுது…


Notes : Rasathi Unna Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. ராசாத்தி உன்ன பாடல் வரிகள்.