Category Archives: தியாகம்

nallavarkellam-satchigal-rendu-song-lyrics-in-tamil

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாதியாகம்

Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : பறவைகளே பதில் சொல்லுங்கள்…
மனிதர்கள் மயங்கும் போது…
நீங்கள் பேசுங்கள்…
மனதிற்கு மனதை கொஞ்சம்…
தூது செல்லுங்கள்…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : மனிதனம்மா மயங்குகிறேன்…
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

BGM


Notes : Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil. This Song from Thyagam (1978). Song Lyrics penned by Kannadasan. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் வரிகள்.