Category Archives: பட்டணத்தில் பூதம்

Antha Sivagami Song Lyrics in Tamil

அந்த சிவகாமி மகனிடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலாஆர்.கோவர்த்தனம்பட்டணத்தில் பூதம்

Antha Sivagami Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…

BGM

பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…

பெண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…

பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…

BGM

பெண் : கண்கள் சரவணன் சூடிடும் மாலை…
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை…
கண்கள் சரவணன் சூடிடும் மாலை…
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை…

பெண் : பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே…
வேலை வணங்காமல் வேறென்ன வேலை…
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே…
வேலை வணங்காமல் வேறென்ன வேலை…

பெண் : நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே…
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே…

பெண் : நிழலாடும் விழியோடும் ஆடினானே…
அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே…
என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி…

BGM

ஆண் : மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…

பெண் : நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…

ஆண் : காலம் மாறினால் காதலும் மாறுமோ…
காலம் மாறினால் காதலும் மாறுமோ…

பெண் : மாறாது மாறாது இறைவன் ஆணை…

ஆண் & பெண் : என்றும் மாறாது மாறாது…
இறைவன் ஆணை…

ஆண் : இந்த சிவகாமி மகனுடன்…
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி…
இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி…

ஆண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
தோகை இல்லாமல் வேலன் ஏதடி…

BGM

பெண் : அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…


Notes : Antha Sivagami Song Lyrics in Tamil. This Song from Pattanathil Bhootham (1967). Song Lyrics penned by Kannadasan. அந்த சிவகாமி மகனிடம் பாடல் வரிகள்.